வியாழன், 6 மார்ச், 2025

அபிராமி அந்தாதி பாடல் 9

"கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே".

              அபிராமி அந்தாதி பாடல்.9.

 நாம் தவமியற்றி மாதவனாக  விளங்கும் போது அத்தவத்தின் விளைவாக விளைந்த ஞானச்சூட்டின் காரணமாக மூன்றாவது கண்னாகிய கருத்துக் கண் விழித்து முக்கண்ணனாகிய எம் தந்தை சிவபெருமான் நம்முள் காட்சியளிக்கிறார்.

 தாய்மையின் காரணமாக பெருத்து மேருமலையைப் போல காட்சி அளித்து பொங்கிப் பெருகி எப்படி தாய்ப்பாலானது வருமோ !
அதே போல் எனக்கு நீ அருளிய ஞான யோக தவத்தின் விளைவாக பேராணந்தம் என்னுடல் முழுவதும் பொங்கியது.ஆணந்தக் கண்ணீரும் தாரை தாரையாக வடிந்தது . அதைக் கண்டு நான் எங்கே பசியால் அழுகிறேனோ! என்று எண்ணி நீயும் ஞான அமுதப்பாலூட்டுகிறாய் தாயாகவும் இருந்து அபிராமித் தாயே!

கருணையால் கனம் பொருந்திய அமுதக் கலசமும், அதைப் படர்ந்து தொங்கும் ஆரமும்(மலர் மாலையும்) சிவந்த கையும்  (பண்பு பொருந்திய செம்மையான மனதின் கை) அப்போது பூத்த பூவின் அழகைப் போலவே இருக்கும் உன் அழகு முகம் .
இறைவா எனது அண்னை அபிராமியாகவே எனக்கு தினமும் காட்சி அளித்து என்னை உய்யச் செய்திடுவாய் தாயே! தாயுமானவரே!
 
                                                சி.எஸ்.சிவா சி

புதன், 5 மார்ச், 2025

திருமந்திரம்

"உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே".
                                      திருமந்திரம் 

விளக்கம் 

உள்ளம் என்பதே கோமான் (அரசர் அல்லது ஆண்டவர்) வசிக்கும் இடம் ஆகும்.

உள்ளத்தில் ஆண்டவர் குடியமர்ந்தவுடன் உடலை அவர் லயமாக்குவார்.
லயமாகும் உடலும் ஆண்டவர் வயமாகும்.

 குடத்தின் வாய் திறந்து இருப்பதால் தண்ணீரை நாம் நிரப்பி கொள்வது போல்,உடலெனும் கடத்தின் வாய் திறக்க திருவடி தீட்சை அளிப்பார்கள். கடத்தின் வாயில் திறந்த பின்னர் ஞான உபதேசத்தால் தெளிந்த ஞானியாக்கி ஞான யோகத்தில் நிலைக்கவைத்து.

ஜீவ நீரை வாயு வடிவில் பெற்று ஆன்ம லிங்கம் ஆக அது உருமாறிட வைத்து ஞான வள்ளலாகவே விளங்கிடச் செய்வார் ஆண்டவர்.

 இந்த மாதிரியான நடவடிக்கைகள் உள்ளம் முதல் தொடங்கி உடல் வரை நடைபெற்று வருவதால் பல்வேறு காரியங்களைச் செய்ய கட்டாயப் படுத்தும் புலன்கள் அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ளும் அந்த ஞானியின் மனதில் ஏதோவொரு வேளையில்
ஏதோவொரு விருப்பம் ஏற்படுமேயானால் உடனே நிறைவேற்ற பாடுபடும் அளவிற்கு மட்டுமே புலன்கள் வேலை செய்து அனுபவித்து ஞானத்தோடு ஒடுங்கி ஞான ஒளி வீசி நிற்கும்.

                              சிவா

அபிராமி அந்தாதி பாடல் 8

"சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவ".

                    அபிராமி அந்தாதி பாடல் 8

  நான்,எனது என்று அடையாளப்படுத்திக் கொண்டு பெற்றால் கொண்டாடுவதும், இழந்தால் திண்டாடுவதுமாக  பாசி படிந்த நிலையில் இருந்த என்னுள் இருந்த எண்ணற்ற கவலைகளை புளியிட்டு விளக்கி பாச விணைகளகற்றி பூரண சுதந்திரம் ஆக்கினாள் .  எனது தந்தை சிவனின் சக்தியான அழகபிராமித் தாய்!

 மகிஷாசுரன் எனும் அரக்கன் ஆணவ மீறலில் தொடர்ந்து ஈடுபட்டதால் அன்னை கோபம் கொண்டு கோர வேஷம் தரித்து அளித்தாள் அந்தரி.

 நீல நிற ஆகாய பூதமாக விளங்கும் விண் ஆற்றலானவள்.பூமியில் அனைவரையும் பெற்றவள் அவளே ஆனாலும் அன்னை அழுக்கடையவே இல்லை.
கன்னித்தன்மை அழியாமல்  விளங்குவாள் என் தாய் நீலநிற ஆகாய அபிராமி!

 குண்டலியை வென்று வாகை சூடி நிற்கும் சிவனின் துணை நீயே!

 அம்மா ஆற்றலரசியே உனது திருவுளம் கனிந்து அருள்புரிந்து எனது மலர்த்தாளைத் திறந்து .
நான் நித்தமும் உனது மலர்த்தாளைத் தரிசனம் செய்ய அருள்வாயே!அபிராமித்தாயே!

                                              சி.எஸ்.சிவா

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சிவவாக்கியர் பாடல் 51

"சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே".

                                            சிவவாக்கியர் 51

வேதங்களை ஓதி ,பூஜைகள் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் இங்கே"குருக்கள்"எனப் பலராலும் அழைக்கப்படுகின்றனர்.

சாத்திரங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்களாலும் ,பூஜை புணஸ்காரங்களாலும் நாங்களே தூய்மையானவர்கள் எனக்கூறிக் கொள்ளும் மானிடராய் இருந்தாலும் அவர்களும் அவர்கள் தீட்டு என எதைக் குறிப்பிடுகிறார்களோ அந்த தூமையால்தான் தாயின் சூதகத்தில் இருந்து உருண்டு திரண்டு மனித உடலெடுத்து இந்த மண்ணுலகிற்கு வந்த தூமைகள்தாம். 

 இடபிங்கலை இரண்டும் சுழுமுனையில் இனைந்து அக்கினி கலையில் நிலை நிற்கும்படி தவமியற்றி தன்னிலை மறந்து தவநிலையில் வாசியை வென்று வாசி நிலை மாறி சிவா எனும் நிலை ஆக ஆகியவர்கள்தாம் உடல் தூய்மையானவராம். இவ்வாறான கலையையுணர மதியற்றவன் எந்த பணியில் ஈடுபட்டாலும் அவர் தூமையானவராம்.

                                                             சிவா

அபிராமி அந்தாதி பாடல் 7

"ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே"..

                       அபிராமி அந்தாதி பாடல் 7

 தயிர் கடையும் மத்தினைப் போல சுழன்று சுழன்று உன்னை தேடுகிறது என் ஆவி! ஆனாலும் எனக்கு தளர்வென்பதே இல்லாத வண்ணம் என்னை வழிநடத்த வேண்டும் தாயே!

 முப்பெரும் கடவுளர்கள் கூட உன்னையே துதித்து உனக்கு சேவை செய்கின்றனர்.

  புருவ மத்தியில் செந்தூர நிற நாடியாக நின்று விளங்கும் பேரழகுத் தாயே!

                                                                 சிவா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி பாடல் 6

அபிராமி அந்தாதி 

"சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே".

                       அபிராமி அந்தாதி பாடல் 6

விளக்கம் 

 யாம் தறுதலையாக திரிபவனில்லை .

 உன் திருவடியை யாம் கண்டு கொண்டதனால் தாமரை தன் இதழ்களை விரித்தது எனது தலையில்.மனமும் வாசனையோடு மலர்ச்சியுற்றது அம்மா திருமந்திரமே உன்னால் எமது மனமது திரமானது!

 இவை எல்லாம் உனது அடியார்களை யாம் கண்டு வணங்கி அவர்களது அடியொற்றி நடந்தால் விளைந்த விளைவே!
 ஆதலால் பரத்தை அடைந்திட ஆகமங்கள் எவை என்று எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது அபிராமித் தாயே !!!

                                                            சிவா

சனி, 22 பிப்ரவரி, 2025

தேஜோமயானந்தம் பாடல்.1கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;கட்செவி யெடுத்தாட்டலாம்;வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்வேதித்து விற்றுண்ணலாம்;வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்விண்ணவரை யேவல்கொளலாம்;சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொருசரீரத்தி ன்ம்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்தன்னிகரில் சித்திபெறலாம்;சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்றதிறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!தெசோ மயானனந்தமே"!. தாயுமான சுவாமிகள் பறந்தோடும் குதிரையையும் பெரிய மதம் பிடித்த யானையையும் வசியப்படுத்தி தன்வசம் ஆக்கலாம்.பசி மிகுந்த கரடி,புலி போன்றவை வாயைக் கட்டலாம்.சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம்.பாம்பை பிடித்து ஆட்டலாம்.வேகும் நெருப்பிலே இரும்பைப் போட்டு தங்கமாக்கி விற்று உண்ணலாம்.மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் எங்கும் உலாவலாம்.தேவர்களை எல்லாம் வேலை வாங்கலாம்.எப்பொழுதும் இளைமையோடு வாழலாம்.மற்றொரு உடலில் புகுந்து விளையாடலாம்.தண்ணீரில் நடக்கலாம், தீயில் குளிக்கலாம் எனக்கு நிகராக இந்த திறைமைகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா உலகில் என்று கொக்கரிக்கலாம்.ஆனால் பொழுதன்றைக்கும் சஞ்சலங்களும், சபலங்களும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மனதை திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாது.மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள தெரிந்தவரே சிவானந்த சித்தர் ஆவார்.இந்த அறிவை எனக்கு வழங்கிய என் குருவாக இருந்து என்னை வழி நடத்தும் அறிவான தெய்வமே என் தேஜோமயானந்த குருவே!.சு.சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...