வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி பாடல் 7

"ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே"..

                       அபிராமி அந்தாதி பாடல் 7

 தயிர் கடையும் மத்தினைப் போல சுழன்று சுழன்று உன்னை தேடுகிறது என் ஆவி! ஆனாலும் எனக்கு தளர்வென்பதே இல்லாத வண்ணம் என்னை வழிநடத்த வேண்டும் தாயே!

 முப்பெரும் கடவுளர்கள் கூட உன்னையே துதித்து உனக்கு சேவை செய்கின்றனர்.

  புருவ மத்தியில் செந்தூர நிற நாடியாக நின்று விளங்கும் பேரழகுத் தாயே!

                                                                 சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...