அபிராமி அந்தாதி
"சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே".
அபிராமி அந்தாதி பாடல் 6
விளக்கம்
யாம் தறுதலையாக திரிபவனில்லை .
உன் திருவடியை யாம் கண்டு கொண்டதனால் தாமரை தன் இதழ்களை விரித்தது எனது தலையில்.மனமும் வாசனையோடு மலர்ச்சியுற்றது அம்மா திருமந்திரமே உன்னால் எமது மனமது திரமானது!
இவை எல்லாம் உனது அடியார்களை யாம் கண்டு வணங்கி அவர்களது அடியொற்றி நடந்தால் விளைந்த விளைவே!
ஆதலால் பரத்தை அடைந்திட ஆகமங்கள் எவை என்று எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது அபிராமித் தாயே !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக