தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
சனி, 22 பிப்ரவரி, 2025
தேஜோமயானந்தம் பாடல்.1கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;கட்செவி யெடுத்தாட்டலாம்;வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்வேதித்து விற்றுண்ணலாம்;வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்விண்ணவரை யேவல்கொளலாம்;சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொருசரீரத்தி ன்ம்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்தன்னிகரில் சித்திபெறலாம்;சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்றதிறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!தெசோ மயானனந்தமே"!. தாயுமான சுவாமிகள் பறந்தோடும் குதிரையையும் பெரிய மதம் பிடித்த யானையையும் வசியப்படுத்தி தன்வசம் ஆக்கலாம்.பசி மிகுந்த கரடி,புலி போன்றவை வாயைக் கட்டலாம்.சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம்.பாம்பை பிடித்து ஆட்டலாம்.வேகும் நெருப்பிலே இரும்பைப் போட்டு தங்கமாக்கி விற்று உண்ணலாம்.மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் எங்கும் உலாவலாம்.தேவர்களை எல்லாம் வேலை வாங்கலாம்.எப்பொழுதும் இளைமையோடு வாழலாம்.மற்றொரு உடலில் புகுந்து விளையாடலாம்.தண்ணீரில் நடக்கலாம், தீயில் குளிக்கலாம் எனக்கு நிகராக இந்த திறைமைகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா உலகில் என்று கொக்கரிக்கலாம்.ஆனால் பொழுதன்றைக்கும் சஞ்சலங்களும், சபலங்களும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மனதை திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாது.மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள தெரிந்தவரே சிவானந்த சித்தர் ஆவார்.இந்த அறிவை எனக்கு வழங்கிய என் குருவாக இருந்து என்னை வழி நடத்தும் அறிவான தெய்வமே என் தேஜோமயானந்த குருவே!.சு.சிவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காகபுஜண்டர் ஞானம் பாடல் 15
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...
-
கர்ம வினைகள் குறித்து சீடன் கேள்வி – குரு பதில்!. 1, சீடன் கேள்வி : குருநாதா, குருநாதர் காட்டிய வழியில் அச்சுபிசகாமல் தியானித்து வரும் மாணவன...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக