புதன், 5 மார்ச், 2025

அபிராமி அந்தாதி பாடல் 8

"சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவ".

                    அபிராமி அந்தாதி பாடல் 8

  நான்,எனது என்று அடையாளப்படுத்திக் கொண்டு பெற்றால் கொண்டாடுவதும், இழந்தால் திண்டாடுவதுமாக  பாசி படிந்த நிலையில் இருந்த என்னுள் இருந்த எண்ணற்ற கவலைகளை புளியிட்டு விளக்கி பாச விணைகளகற்றி பூரண சுதந்திரம் ஆக்கினாள் .  எனது தந்தை சிவனின் சக்தியான அழகபிராமித் தாய்!

 மகிஷாசுரன் எனும் அரக்கன் ஆணவ மீறலில் தொடர்ந்து ஈடுபட்டதால் அன்னை கோபம் கொண்டு கோர வேஷம் தரித்து அளித்தாள் அந்தரி.

 நீல நிற ஆகாய பூதமாக விளங்கும் விண் ஆற்றலானவள்.பூமியில் அனைவரையும் பெற்றவள் அவளே ஆனாலும் அன்னை அழுக்கடையவே இல்லை.
கன்னித்தன்மை அழியாமல்  விளங்குவாள் என் தாய் நீலநிற ஆகாய அபிராமி!

 குண்டலியை வென்று வாகை சூடி நிற்கும் சிவனின் துணை நீயே!

 அம்மா ஆற்றலரசியே உனது திருவுளம் கனிந்து அருள்புரிந்து எனது மலர்த்தாளைத் திறந்து .
நான் நித்தமும் உனது மலர்த்தாளைத் தரிசனம் செய்ய அருள்வாயே!அபிராமித்தாயே!

                                              சி.எஸ்.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...