வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சிவவாக்கியர் பாடல் 51

"சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே".

                                            சிவவாக்கியர் 51

வேதங்களை ஓதி ,பூஜைகள் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் இங்கே"குருக்கள்"எனப் பலராலும் அழைக்கப்படுகின்றனர்.

சாத்திரங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்களாலும் ,பூஜை புணஸ்காரங்களாலும் நாங்களே தூய்மையானவர்கள் எனக்கூறிக் கொள்ளும் மானிடராய் இருந்தாலும் அவர்களும் அவர்கள் தீட்டு என எதைக் குறிப்பிடுகிறார்களோ அந்த தூமையால்தான் தாயின் சூதகத்தில் இருந்து உருண்டு திரண்டு மனித உடலெடுத்து இந்த மண்ணுலகிற்கு வந்த தூமைகள்தாம். 

 இடபிங்கலை இரண்டும் சுழுமுனையில் இனைந்து அக்கினி கலையில் நிலை நிற்கும்படி தவமியற்றி தன்னிலை மறந்து தவநிலையில் வாசியை வென்று வாசி நிலை மாறி சிவா எனும் நிலை ஆக ஆகியவர்கள்தாம் உடல் தூய்மையானவராம். இவ்வாறான கலையையுணர மதியற்றவன் எந்த பணியில் ஈடுபட்டாலும் அவர் தூமையானவராம்.

                                                             சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...