வியாழன், 6 மார்ச், 2025

அபிராமி அந்தாதி பாடல் 9

"கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே".

              அபிராமி அந்தாதி பாடல்.9.

 நாம் தவமியற்றி மாதவனாக  விளங்கும் போது அத்தவத்தின் விளைவாக விளைந்த ஞானச்சூட்டின் காரணமாக மூன்றாவது கண்னாகிய கருத்துக் கண் விழித்து முக்கண்ணனாகிய எம் தந்தை சிவபெருமான் நம்முள் காட்சியளிக்கிறார்.

 தாய்மையின் காரணமாக பெருத்து மேருமலையைப் போல காட்சி அளித்து பொங்கிப் பெருகி எப்படி தாய்ப்பாலானது வருமோ !
அதே போல் எனக்கு நீ அருளிய ஞான யோக தவத்தின் விளைவாக பேராணந்தம் என்னுடல் முழுவதும் பொங்கியது.ஆணந்தக் கண்ணீரும் தாரை தாரையாக வடிந்தது . அதைக் கண்டு நான் எங்கே பசியால் அழுகிறேனோ! என்று எண்ணி நீயும் ஞான அமுதப்பாலூட்டுகிறாய் தாயாகவும் இருந்து அபிராமித் தாயே!

கருணையால் கனம் பொருந்திய அமுதக் கலசமும், அதைப் படர்ந்து தொங்கும் ஆரமும்(மலர் மாலையும்) சிவந்த கையும்  (பண்பு பொருந்திய செம்மையான மனதின் கை) அப்போது பூத்த பூவின் அழகைப் போலவே இருக்கும் உன் அழகு முகம் .
இறைவா எனது அண்னை அபிராமியாகவே எனக்கு தினமும் காட்சி அளித்து என்னை உய்யச் செய்திடுவாய் தாயே! தாயுமானவரே!
 
                                                சி.எஸ்.சிவா சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...