15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
"தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே"
அபிராமி அந்தாதி.
மனிதர்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு இம்மண்ணுலக இன்பங்களையும், பெரும் பதவிகளையும் மட்டும் அல்ல! தவத்தில் சிறந்து விளங்கும் மாதவர்களுக்கு விண்ணுலக செல்வமான அழியா ஒளியுடம்பையும் அருள்பவளும் அன்னை அபிராமித் தாயே! ஆதலால்
அபிராமித் தாயை நோக்கித் தவம் புரிவோம் அருள் பெற்றுவுயர்வோம்.
சிவனணைந்த பெருமாள்