வியாழன், 15 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 14

தலைமை நிலையைப் பெற!

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

                   அபிராமி அந்தாதி பாடல் 14

 வான்காந்த அலைவரிசையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு வாழும் வானவர்களும்:

,தன்னையறிந்து தலைவனை உணர்ந்து, தலைவர்கள் ஆனவர்களும்,சிந்தினையை செயல்படுத்தும் பிரம்மாக்களும், விளைவுகளை காப்பாற்றி வருகின்ற நாராயணர்களும் ஆகிய அனைவரும் உன் சித்தத்தினாலே இயக்கம் ஆகின்றனர்.

 இந்தவாறு இயங்கும் பிரபஞ்ச உண்மையை உணர்ந்து அறவழியில் நடப்பவர்கள் பரவெளி தருகின்ற பேராணந்த பெருஞ்சுகத்தை அனுபவிக்கும் பரமானந்தர் என்று பெயர் பெற்று வாழ்வர்.இவ்வாறு வாழ்ந்து வருகின்ற பரமானந்தர்கள் இவ்வுலகம் எங்கும் உன்னை சந்தித்து கலந்துரையாடி மகிழ முடியும் என்பதை உணர்த்திய பேரொளி காட்டும் தண்மையான தீயே! எனது அபிராமித் தாயே!

சிவனணைந்த பெருமாள்
நிறுவனர் & தலைவர் 
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...