வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 10

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

அபிராமி அந்தாதி பாடல் 10

நிற்கும் போதும், இருக்கின்ற போதும் நடக்கும் போதும்,
கிடையில் நான் படுக்கையிலும், இறையே உனையடைய எனக்கு  உன்னால் வாழையடி வாழையாக தொடர்ந்து சித்தர்கள் மூலமாக கிடைத்த அருட்பயிற்சிகளில் இருந்து நான் நலுவதுதில்லை உன் நினைவே என் நினைவு எப்போதும்.

என்றும் எமதுள்ளம் உன் மலரடித்தாளை வணங்கிய படியே இருக்கிறது.

வேதங்களினாலும் உன்னை முழுமையாக குறிப்பாக இதுதான், இப்படித்தான் என்று குறிப்பிட்டு எழுதமுடியவில்லை.மனமடங்கி நிற்கத் தெரிந்த மனிதர்கள் உள்ளத்தில் ஒன்றி நடம் ஆடுகின்ற பேரருளே அவர்களுக்கே உனதருளால் எல்லா மறைகளையும் முழுமையாக வெட்டவெளிப்படையாக்குகிறாய்.

உமா தேவியே அன்றும் நீ இமயத்தில் பிறந்தாய், இன்றும் நீ என் இமயத்தில் (இமயம் என்பது இமைகளில் தொடர்ந்து மேம்பட்ட பகுதிகளை குறிக்கிறது) பிறந்துவிட்டால் நானும் பூ, பிஞ்சு ,காய் போன்ற நிலைகளில் அழிந்து விடாமல் முழுவதுமாக கனிந்து ஞானப் பழமாகி விடுவேன்  அருள்புரிவாயாக அன்னையே!

பொருள் விளக்கம் 
சு.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...