புதன், 14 மே, 2025

அபிராமி அந்தாதி பாடல் 13

பக்தி வைராக்கியம் ஆக!!!

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

                              அபிராமி அந்தாதி 13.

 அன்பால் பூவைப் போன்ற மலர்ந்த முகத்துடன் ஈரேழு பதினான்கு உலகங்களையும் காத்து அருள்கின்ற அம்மா!!
அரனுக்கும் முன்பிருந்தே அருள்பாலிக்கின்றாய் நீ!
இளமை குன்றாதவன் என்று புகழ் பெற்ற முகுந்தன் ஆகிய நாராயணனுக்கும் இளையவளாகவும் விளங்கி கன்னியாகுமரி எனவும் விளங்குகிறாய் மூத்த முன்னோடியே அம் மா பரம்பொருளே!பராபரமே!

 மாதவம் புரிந்து அறிந்து கொள்ளலாம் உன்னை அன்றி வோறொரு தெய்வம் இல்லை !

 அனைத்தும் உன்னில் இருந்தே உன்னால் உருவாக்கப்பட்டது ஆகும் .
அனைத்தும் உன்னிலே அடக்கமும் ஆகும்.
உணர்ந்து கொண்டேன் அபிராமித்தாயே! ஆதலால் என்னை அடக்கி ஆண்டுகொள்ளே!

 சிவனணைந்தபெருமாள்
நிறுவனர் . தலைவர்                                                     
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...