சனி, 19 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 12

"கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே".

               அபிராமி அந்தாதி பாடல் 12

 கண் நீ அதன் மூலமாக உன் புகழை கற்றறிந்து கொண்டேன் மணிவாசகம் புரிந்தது.
 உன் இருபாதங்களாலும்.அதைவைத்தே இரவுபகலற்ற இடத்தின் தரிசனம் பெற்றேன்.

 உன்னை எத்தனையோ பேர் பெருமை செய்து வணங்கி வருகிறார்கள்.அப்படியான அறிவு, பக்தி சிறிதும் இல்லாத அடியேனுக்கு நீ வழங்கி அருள்கின்ற ஞானப் பயிற்சிகள் யாவும் கிடைக்கப் பெற்று நான் உயர்வடைய உதவுவது நான் எந்த முற்பிறப்பில் செய்த புண்ணியமோ!ஏழு சக்கரங்கள் மூலமாக சக்தி களமாக பூத்து குலுங்கும் என் அம்மா தாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...