வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
காகபுசுண்டர் ஞானம் பாடல் 8
விளக்கம்
மைந்தா! அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) நடுப்பகுதியில் (சஹஸ்ராரம் அல்லது உச்சி முனையில்) நீ வாசியோகப் பயிற்சியில் ஈடுபட்டு வரும்போது, சூரியகலை (பிங்கலை நாடி), சந்திரகலை (இடை நாடி) ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து அக்னிகலை (சுழுமுனை நாடி) ஆகி, மூன்று ஒளிகளாக (சூரிய-சந்திர-அக்னி) இணைந்து, நரம்புகள் அனைத்தையும் ஜடை (விழுது) போலப் பின்னிக்கொண்டு கீழ்நோக்கிப் பாயும். இவ்வாறு உன் இரு கண்களிலும் அந்த ஒளி வந்து பாயும். அதனால் உன் கண்கள் மிகுந்த ஆற்றல் மிக்கவையாகவும், தெய்வீக ஒளி நிறைந்தவையாகவும் ஆகும். அப்போது அண்டங்கள், பிரம்மாண்டங்கள் உள்ளிட்ட அனைத்துலகங்களையும் உன் ஒளிபொருந்திய கண்களால் தெளிவாகக் காண முடியும்.
இப்பாடல் குண்டலினி யோகத்தில் சுழுமுனை வழியாக பிராணன் இறங்கி கண்களில் ஒளியை நிரப்பி, திவ்ய திருஷ்டி (தெய்வீகப் பார்வை) அளிக்கும் ரகசியத்தை விளக்குகிறது.
சி எஸ் சிவா