"காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே"!
காகபுசுண்டர் ஞானம் 4
பல்வேறு உலகியல் சார்ந்த இன்ப துன்பங்கள் உன்னை சூழும் இருந்தாலும் விடாமல் குரு உனக்கு அருளிய ஞான பயிற்சிகளை சிரத்தையுடன் செய்து உறுதியுடன் நில்!
பதினெட்டு முடிச்சுகளையும் கடந்து தாமரை இதழ்களை ஒத்த பிரம்மரந்திரம் என்று கூறப்படும் அண்ட உச்சியே காணுகின்ற கோயில்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்குகிறது.
இந்த பயிற்சி செய்வதற்கு மந்திரம் என்றோ,விதி,மதி என்றோ மயங்கி நிற்காதே! நல்ல கதி தரும் வழியில் தான் நீ பயணிக்கிறாய்! அதனால் மனமொன்றிய தவத்தில் ஈடுபடுவாயாக! சுத்தசிவம் அருளால் சுந்தரனாகத் திகழ்வாய்!.
சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
புதன், 10 டிசம்பர், 2025
காகபுசுண்டர் ஞானம் 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காகபுஜண்டர் ஞானம் பாடல் 15
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...
-
கர்ம வினைகள் குறித்து சீடன் கேள்வி – குரு பதில்!. 1, சீடன் கேள்வி : குருநாதா, குருநாதர் காட்டிய வழியில் அச்சுபிசகாமல் தியானித்து வரும் மாணவன...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக