புதன், 10 டிசம்பர், 2025

காகபுசுண்டர் ஞானம் 4

"காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே"!

                        காகபுசுண்டர் ஞானம்  4

பல்வேறு உலகியல் சார்ந்த இன்ப துன்பங்கள் உன்னை சூழும் இருந்தாலும் விடாமல் குரு உனக்கு அருளிய ஞான பயிற்சிகளை சிரத்தையுடன் செய்து உறுதியுடன் நில்!

பதினெட்டு முடிச்சுகளையும் கடந்து தாமரை இதழ்களை ஒத்த பிரம்மரந்திரம் என்று கூறப்படும் அண்ட  உச்சியே காணுகின்ற கோயில்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்குகிறது.

இந்த பயிற்சி செய்வதற்கு மந்திரம் என்றோ,விதி,மதி என்றோ மயங்கி நிற்காதே! நல்ல கதி தரும் வழியில் தான் நீ பயணிக்கிறாய்! அதனால் மனமொன்றிய தவத்தில் ஈடுபடுவாயாக! சுத்தசிவம் அருளால் சுந்தரனாகத் திகழ்வாய்!.

சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...