கேளப்பா கேசரமே அண்ட வுச்சி கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும் ஆளப்பா பரப்பிரம யோக மென்றே அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும் வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும் நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே
காகபுசுண்டர் ஞானம் பாடல் 5
கேளப்பா சீடனே அண்டவுச்சி (அண்டம் என்பது முட்டை போன்ற வடிவம்)அது உன் மண்டை உச்சி, அதேபோல் உன் இரண்டு கண்களின் நடுவிலுள்ள ஊசிமுனை வாசலைக் குறிக்கும்.(இதையெவ்லாம் உன் யோக ஞான குரு உன் மனவளர்ச்சிக்கு ஏற்றவாறு நேரடி பயிற்சி தருவார் நீ பயில வேண்டும்.) இந்தவாறு பயிற்சியாளர்கள் மூலமாக சிறந்த முறையில் பயின்று வருபவர் மனம் நிலைபெற்று விளங்கும்.
பரப்ப்பிரம்த்தை உணர்த்தும் இக்கல்வியை நீ தொடர்ந்து கற்றுவர உலகில் எவரும் அனுபவித்து அறிந்து கொள்ள முடியாத பேரானந்த பெருஞ்சுகத்தைக் கொடுத்து உன்னுடலின் சுமை கூட உன் உணர்வுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்து நிற்கின்ற அனுபவம் பெறுவாய்.
மனம் வெட்டவெளி என்றாகி ஆசையைத் தூண்டுகின்ற எண்ணங்கள் உற்பத்தி செய்வதை நிறுத்தி கொள்ளும்.இந்த காரணத்தால் உன் உயிர் சக்தியாகிய விந்துவானது கெடாமல் தயிரைப் போல கெட்டியாகி பேரொளியாக விளங்கும்.
ஒளிவீசி திகழும் உன் முகம்.
நாதமெனும் ஓசை சக்தியின் அருளால் உன் காதில் ரீங்காரம் போலவும், சிலம்பொலி போலவும் கேட்டு உன்னை மேலும் மேலும் பரவசப்படுத்தும்.
சி எஸ் சிவா
சீடனே, கேளு:
அண்டம் என்றால் மண்டை உச்சியை குறிக்கும் மற்றும்
கண்களின் நடுவில் உள்ள ஊசிமுனை வாசலையும் யோகத்தில் அடையாளம் காட்டுகிறார்கள்.
உன் குரு உனக்கு உகந்த முறையில் நேரடி பயிற்சி தருவார். அதைச் சரியாகப் பயின்றால்:
மனம் தெளிவாகவும் நிலைபெற்றும் இயங்கும்.
பரப்புபிரம்மத்தை உணர்ந்து, உலகில் யாரும் அனுபவிக்க முடியாத பேரானந்தம் உண்டாகும்.
உன் உடலும் மனமும் உயர்ந்த ஒளியுடன் ஒளிரும்.
மனம் வெட்டவெளி போல அமைந்தால், ஆசை எண்ணங்கள் உண்டாகாமல் நிறுத்தலாம்.
அதனால், உன் உயிர்சக்தி (விந்துவானது) சிதையாமல், நிதானமாகவும் ஒளியுடன் இருக்கும்.
உன் முகம் ஒளிவீசி திகழும்.
நாத சக்தி உன் காதில் ரீங்காரம் போலவும், சிலம்பொலி போலவும் கேட்டு உன்னை பரவசப்படுத்தும்.
இதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒன்றாகி, உயர்ந்த ஆனந்தத்தை அடையலாம்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக