தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
செவ்வாய், 14 ஜனவரி, 2025
பொங்கல் வாழ்த்துக்கள்
வெள்ளி, 10 ஜனவரி, 2025
தன்னை அறியும் கல்வியே கல்வி ஆகும்.
மெய்ஞானம் என்னவாகும்?
வியாழன், 9 ஜனவரி, 2025
தேஜோமயானந்தம் பாடல் 1 தாயுமானவர்
செவ்வாய், 7 ஜனவரி, 2025
அகத்தியர் ஞானம் 1
"சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரமஞானி :
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோடசம் தானே!"
அகத்தியர் பாடல்/ ஞானம் 1
இந்த பூமியில் கோடியில் ஒருவர்தான் சகல உயிர்களுக்கும் தெய்வமாக நின்று அருளை வழங்குவது பராபரமே என்று புத்தியினால் அறிந்து மனம் அடங்கி மிகவும் தன்மையான புண்ணிய ஆத்மாவாக விளங்குவார்கள்.
இன்று அலங்காரமாவும் காலப்போக்கில் பாழாகிவிடும் என்கிற எந்த விதமான ஜடப் பொருட்கள் மீதும் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் இருப்பவர் ஞானி!.
இன்னொன்றையும் வெளிப்படையாக சொல்கிறேன் குருநாதர் ஆசியால் நீ பெற்றுக்கொண்ட சுழுமுனை பயிற்சியில் சீராக ஈடுபட்டு அதன் நிலையையும் அது தரும் அனுபவப் பலன்களையும் அறிந்து கொள்வாயானால் அதுவே மோட்சம் பெறும் பாதை ஆகும்.
சு.சிவா
நிறுவனர்,தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
ஒழுக்கம்
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு"
குறள் 21.
எங்கும் மோகம், எதிலும் மோகம் என்று அழைந்து திரியாமல்!.
மனித வாழ்கைக்கு மிஞ்சிய பேராசைகளை புலன்கள் உருவாக்கத் தான் செய்யும் அப்படியே விட்டால் நாளடைவில் மோகத்தீயாகவே மாறும் எப்படியாவது நினைத்ததை அடைந்திட அலையும். அவ்வாறு பேராசைகளால் உருவாகும் பற்றுக்களை எல்லாம் நீக்கிக் கொண்டு தனது வாழ்க்கையில் தள்ள வேண்டியதைத் தள்ளியும், கொள்ள வேண்டியதைக் கொண்டும் நிர்வாகத் திறைமையோடு ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வாரானால் அவரையே ஒழுக்கமானவர் என்று துணிந்து அறிஞர்கள் உலகம் பாராட்டி மகிழும்.
செய்யும் தொழிலில் திறம்பட செயல்பட்டு ஒழுக்கமுடன் வாழ்ந்திட மற்றொரு குறள் மூலமாக
வள்ளுவரே வழியும் காட்டுகிறார் .
பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றிஅப் பற்றை விடற்க்கு.
ஒழுக்கமாகத் தொழில் புரிந்து இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தன்முனைப்பு சிறிதுமின்றி வாழும் பற்றற்ற ஞானிகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து வருகின்றனர் அப்படியான மெய்ஞான குருவிடம் சரணடைந்து மெய்ஞான கல்வியை கற்றுக் கொண்டு நீங்களும் அறிஞர்கள் புகழும்படி வாழுங்கள்.
சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
திருக்குறள்
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு"
குறள் 21.
எங்கும் மோகம், எதிலும் மோகம் என்று அழைந்து திரியாமல்!.
மனித வாழ்கைக்கு மிஞ்சிய பேராசைகளை புலன்கள் உருவாக்கத் தான் செய்யும் அப்படியே விட்டால் நாளடைவில் மோகத்தீயாகவே மாறும் எப்படியாவது நினைத்ததை அடைந்திட அலையும். அவ்வாறு பேராசைகளால் உருவாகும் பற்றுக்களை எல்லாம் நீக்கிக் கொண்டு தனது வாழ்க்கையில் தள்ள வேண்டியதைத் தள்ளியும், கொள்ள வேண்டியதைக் கொண்டும் நிர்வாகத் திறைமையோடு ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வாரானால் அவரையே ஒழுக்கமானவர் என்று துணிந்து அறிஞர்கள் உலகம் பாராட்டி மகிழும்.
செய்யும் தொழிலில் திறம்பட செயல்பட்டு ஒழுக்கமுடன் வாழ்ந்திட மற்றொரு குறள் மூலமாக
வள்ளுவரே வழியும் காட்டுகிறார் .
பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றிஅப் பற்றை விடற்க்கு.
ஒழுக்கமாகத் தொழில் புரிந்து இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தன்முனைப்பு சிறிதுமின்றி வாழும் பற்றற்ற ஞானிகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து வருகின்றனர் அப்படியான மெய்ஞான குருவிடம் சரணடைந்து மெய்ஞான கல்வியை கற்றுக் கொண்டு நீங்களும் அறிஞர்கள் புகழும்படி வாழுங்கள்.
சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
காகபுஜண்டர் ஞானம் பாடல் 15
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...
-
கர்ம வினைகள் குறித்து சீடன் கேள்வி – குரு பதில்!. 1, சீடன் கேள்வி : குருநாதா, குருநாதர் காட்டிய வழியில் அச்சுபிசகாமல் தியானித்து வரும் மாணவன...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...