தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே'' (திரு.355)
""என்னையே நானறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னான்டி''
(பட்டினத்தார், அருள் புலம்பல்,22)
நீங்கள் அடுத்தவர் மனதில் எப்படி உணரப்படுகிறீர்கள்.என்பதை விடுத்து உங்கள் மனதால் உங்களைப் பற்றி என்ன அறிந்து புரிந்து கொள்கிறீர்களோ அதுதான் முதலில் தன்னையறிவது.
ஒரு மாணவன் இவ்வாறு தேர்ச்சி பெற்று வரும்பொழுது தான் குருநாதர் தன்னைத் தானே மேலும் சூட்சுமமாக அறிந்து கொள்ளும் பயிற்சிகள் கொடுத்து பக்குவப்படுத்தி தன்னைத் தானே அர்ச்சனை செய்து கொள்ளும் அளவுக்கு வளர்த்தெடுப்பார்.
சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக