வியாழன், 9 ஜனவரி, 2025

தேஜோமயானந்தம் பாடல் 1 தாயுமானவர்

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே"!.

                              தாயுமான சுவாமிகள் 

 பறந்தோடும் குதிரையையும் பெரிய மதம் பிடித்த யானையையும் வசியப்படுத்தி தன்வசம் ஆக்கலாம்.

பசி மிகுந்த கரடி,புலி போன்றவை வாயைக் கட்டலாம்.

சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம்.

பாம்பை பிடித்து ஆட்டலாம்.

வேகும் நெருப்பிலே இரும்பைப் போட்டு தங்கமாக்கி விற்று உண்ணலாம்.

மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் எங்கும் உலாவலாம்.

தேவர்களை எல்லாம் வேலை வாங்கலாம்.

எப்பொழுதும் இளைமையோடு வாழலாம்.

மற்றொரு உடலில் புகுந்து விளையாடலாம்.

தண்ணீரில் நடக்கலாம், தீயில் குளிக்கலாம் எனக்கு நிகராக இந்த திறைமைகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா உலகில் என்று கொக்கரிக்கலாம்.

ஆனால் பொழுதன்றைக்கும் சஞ்சலங்களும், சபலங்களும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மனதை திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாது.

மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள தெரிந்தவரே சிவானந்த சித்தர் ஆவார்.இந்த அறிவை எனக்கு வழங்கிய என் குருவாக இருந்து என்னை வழி நடத்தும் அறிவான தெய்வமே!
 என் தேஜோமயானந்த குருவே!.

சு.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...