செவ்வாய், 7 ஜனவரி, 2025

ஒழுக்கம்

 "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு"

                                        குறள் 21.


எங்கும் மோகம், எதிலும் மோகம் என்று அழைந்து திரியாமல்!.


மனித வாழ்கைக்கு மிஞ்சிய பேராசைகளை புலன்கள் உருவாக்கத் தான் செய்யும் அப்படியே  விட்டால் நாளடைவில் மோகத்தீயாகவே மாறும் எப்படியாவது நினைத்ததை அடைந்திட அலையும். அவ்வாறு பேராசைகளால் உருவாகும் பற்றுக்களை எல்லாம்   நீக்கிக் கொண்டு  தனது வாழ்க்கையில்  தள்ள வேண்டியதைத் தள்ளியும், கொள்ள வேண்டியதைக் கொண்டும் நிர்வாகத் திறைமையோடு ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வாரானால் அவரையே ஒழுக்கமானவர் என்று துணிந்து அறிஞர்கள் உலகம் பாராட்டி மகிழும்.


செய்யும் தொழிலில் திறம்பட செயல்பட்டு ஒழுக்கமுடன் வாழ்ந்திட மற்றொரு குறள் மூலமாக 

வள்ளுவரே வழியும் காட்டுகிறார் .


பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றிஅப் பற்றை விடற்க்கு.


ஒழுக்கமாகத் தொழில் புரிந்து இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தன்முனைப்பு சிறிதுமின்றி வாழும் பற்றற்ற ஞானிகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து வருகின்றனர் அப்படியான மெய்ஞான குருவிடம் சரணடைந்து மெய்ஞான கல்வியை கற்றுக் கொண்டு நீங்களும் அறிஞர்கள் புகழும்படி வாழுங்கள்.


சு.சிவா

நிறுவனர், தலைவர் 

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...