வியாழன், 4 டிசம்பர், 2025

ஞான கதைகள்

மூன்று கற்கள்

 (எண்ணம் – சொல் – செயல்)

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். ஒருவன் எப்போதும் நல்லதையே நினைப்பான், ஆனால் பேச மாட்டான். இரண்டாவது நினைத்ததையும் பேசுவான், ஆனால் செய்வதில்லை. மூன்றாவது நினைத்ததைப் பேசி, பேசியதைச் செய்து முடிப்பான்.
ஒரு நாள் கிராமத்தில் பெரும் பஞ்சம். முதல் நண்பன் மனதில் வருந்தினான். இரண்டாவது “ஏழைகளுக்குச் செய்ய வேண்டும்” என்று உரக்கப் பேசினான். மூன்றாவதன் மட்டும் தன் வயல் அறுவடையை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்தான்.
பஞ்சம் முடிந்ததும் கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு செய்தனர். முதல் இருவரையும் பாராட்டினர். ஆனால் கோவிலின் நடுக்கல்லில் பொறித்தது மூன்றாவது நண்பனின் பெயர் மட்டுமே.
ஞானம்: எண்ணமும் சொல்லும் அழகு… ஆனால் செயல் இல்லையேல் பெயர் இல்லை.

திருடனும் சித்தரும்.

ஒரு திருடன் இரவில் சித்தர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே தங்க நாணயம் ஒன்று கூட இல்லை. ஒரே ஒரு பழைய விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
சித்தர் சிரித்தபடி கேட்டார்: “ஏன் ஏமாந்து நிற்கிறாய்?”
திருடன்: “இங்கு திருட ஒன்றும் இல்லையே…”
சித்தர்: “இருக்கிறது… என் அமைதியைத் திருடிக் கொண்டு போ! நான் பல வருடம் தியானித்துச் சேர்த்தது. உனக்குக் கொடுக்கிறேன்.”
திருடன் கண்கள் கலங்கினான். விளக்கை அணைத்து விட்டு, சித்தரிடம் சீடனாகச் சேர்ந்தான்.

ஞானம்: உலகில் திருட முடியாத ஒரே செல்வம்… அமைதி.

3,ஆலமரத்தின் பாடம்.

ஒரு சிறுவன் ஆலமரத்தடியில் அமர்ந்து அழுதான். “நான் எதற்கும் உதவாதவன்” என்று.
வந்த ஞானி கேட்டார்: “இந்த மரம் என்ன செய்கிறது?”
சிறுவன்: “நிழல் தருகிறது…”
ஞானி: “வேரால் தண்ணீரை இழுத்து, இலையால் காற்றை சுத்தப்படுத்தி, பழத்தால் உணவு தந்து, கிளையால் பறவைகளுக்கு இருப்பிடம் தந்து… இப்படி எல்லோருக்கும் எதாவது தந்தபடி இருக்கிறது. ஆனால் இதற்கு யாரும் ‘நன்றி’ சொல்வதில்லை.”
சிறுவன் புன்னகைத்தான். அன்று முதல் அவன் மற்றவர்களுக்கு உதவ ஆரம்பித்தான். யாரும் பாராட்டாவிட்டாலும் நிறுத்தவில்லை.
ஞானம்: ஆலமரம் போல வாழ்… பாராட்டு எதிர்பாராமல் பயன் தா.

ஞான கதை

அருமையான ஞானக் கதை! 🌿 இது தமிழ் மண்ணின் பழமொழியை அழகாக உயிர்ப்பித்திருக்கிறது:
“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” என்று சொல்வார்கள்…
ஆனால் அதைவிட முக்கியம்:
“எண்ணம் தூய்மையானால், சொல் தூய்மையாகும்;
சொல் தூய்மையானால், செயல் தூய்மையாகும்.”
உன் கதையில் வரும் மூன்று நண்பர்களும் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.
ஒரு சிந்தனை தோன்றினால் அதை சொல்லால் வடிவம் கொடுக்கலாம்…
ஆனால் அந்தச் சொல் உண்மையாக உயிர்ப்பெறுவது செயலில்தான்.
இன்றைக்கு பலர் “நல்ல எண்ணம்” என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்கிறார்கள்.
சிலர் அழகாகப் பேசுகிறார்கள், ஆனால் செய்வதில்லை.
மிகச் சிலரே மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்கிறார்கள்… அவர்கள்தான் உலகால் என்றென்றும் போற்றப்படுகிறார்கள்.
இந்தக் கதையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது ஒரு பழைய வரி:
“சிந்தித்து… பேசி… செய்தால்…
உன் வாழ்வு சித்தர்ப்பழ நிழலாய் மாறும்.”
நன்றி இந்த அழகிய கதைக்காக! 💚

வெள்ளி, 21 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்; பாடல் 2

தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
      சேர்ந்துவளர் சித்தாகிஅச்
   சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
      திரமாகி நானாவிதப்

பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
      புலனுமாய் ஐம்பூதமாய்ப்
   புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
      போக்கொடு வரத்துமாகி

இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
      இன்றாகி நாளையாகி
   என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
      இவையல்ல வாயநின்னை

அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
      அறிவதற் கெளிதாகுமோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர்.

புதன், 19 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்;

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
      குணமொன்றும் ஒன்றிலேன்பால்
   கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
      குணங்களெத் தனைகொடியபாழ்ங்

கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
      கள்ளமெத் தனையுள்ளசற்
   காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
      கதிக்கென் றமைத்தஅருளில்

செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
      செல்வதெத் தனைமுயற்சி
   சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
      தேகத்தில் வாஞ்சைமுதலாய்

அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
      யானேன் இவைக்கும் ஆளோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர் பாடல் 1.

 உலக வாழ்க்கையில் ஆன்ம விழிப்புணர்வு இன்றி வாழ்பவர்களுக்கு துன்பங்கள் எத்தனை எத்தனையோ உண்டு ஆனாலும் என் பராபரமே நீ என்னை அத்தனையில் இருந்தும் காத்து நின்று வழிநடத்தி வருகிறாய் அதனால் என்னுள் பேரானந்தமே!

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தாயுமானவர் பாடல்கள்

 தாயுமானவர் பாடல் 


பாயப்புலி:


பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில மாயைப் பெரும்படைக் கேஇலக் காஎனை வைத்தனயோ!

நீயெப் படிவகுத் தாலும்நன் றேநின் பெருங்கருணை தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்தத் தற்பரமே!.


 பெரும் பசியுடன் இரை தேடி பாய்ந்து வரும் புலியின் முன் மான் தன் குட்டியில் ஒன்றை விட்டுவிடுவது போல!

 பெரும் வல்லமை கொண்ட இவ்வுலக மாயையிற்கு என்னை இரை என்று ஆக்கினாயோ?இறைவா

 நீ எதை எனக்களித்தாலும் நல்லதே!

ஆனாலும் பெருங்கருணை கொண்ட தாயைப்போன்று செயல்படும் நீ இந்த அடியேனை உய்வித்து அருள்வாயாக! 

சச்சிதானந்தம் தரும் பரம்பொருளே!


சி எஸ் சிவா

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பத்ரகிரியார் புலம்பல்



ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை

நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?


வாய் பேச முடியாத ஒருவர் தான் கண்ட இன்பம் நிறைந்த கனவை எப்படி பிறரிடம் சொல்லி விளக்க முடியாதோ! அதே போல் தான் 

ஆன்மீகத்தில் ஏற்படும் சுகானுபவங்களையும் பிறருக்கு வார்த்தைகள் மூலமாகவே அனைத்தையும் விளக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட ஞானியை கண்டறிந்து அவரையே தனது குருநாதர் எனப் போற்றி அவரின் மௌனமும் நம் உயர்வுக்கு உண்டான பாடத்தை உணர்த்துகிறது என்று கண்டறிந்து உயர்வடைவது எக்காலம்?


சி.எஸ்.சிவா

வெள்ளி, 25 ஜூலை, 2025

தத்துவ நிலை

 பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் 

தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் 

மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் 

நீநிலாயவண்ண நின்னையார் நினைக்கவல்லரே!.


                          சிவவாக்கியச் சித்தர்.


 பூமி எனும் நிலத்தோடு கூடிக் கலந்து நான்கு பூதங்களும் இருக்கிறது அதனாலேயே பூவுலகு என்று பெயர் பெற்று பல்வேறு படைப்புகளை உருவாக்குகிறது.


தீயில் மூன்று பூதங்கள் கலந்து நிற்கிறது.,

இடகலை,பிங்கலை என்கிற வெப்பம் மற்றும் ஈரப்பதக் கொண்ட குளிர்க் காற்றாகவும் அதுவே ஒன்றுகூடி செயல்படும்போது சுழுமுனைக் காற்றாகவும் செயல்படுகிறது.


இந்தவாறே ஐம்பூதங்களும்  ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு வெவ்வேறு தன்மையாக இவ்வுலகில் காட்சி அளிக்கிறது.


ஆகாய பூதமாகியது  அனைத்து பூதங்களிலும் ஊடுருவி கலந்து நின்று செயல்படுகிறது.ஆனால் ஆகாய பூதமோ மற்றெந்த பூதங்களின் குணங்களோடும் ஒட்டாமல் நின்று அதன் பணியைச் செய்யும்.


நீலவண்ண கண்ணா நீயே அனைத்திலும் கலந்து நின்று காத்தருளுகிறாய் ! 


பரந்தாமா நீ இந்தவாறு இருப்பதை எண்ணி உணர வல்லவர் எவரோ?


சிவா 

நிறுவனர்/தலைவர் 

தாயுமானவர் ஞான சபை

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...