தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
வியாழன், 4 டிசம்பர், 2025
ஞான கதைகள்
ஞான கதை
வெள்ளி, 21 நவம்பர், 2025
தாயுமானவர் பாடல்
புதன், 19 நவம்பர், 2025
தாயுமானவர் பாடல்
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025
தாயுமானவர் பாடல்கள்
தாயுமானவர் பாடல்
பாயப்புலி:
பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில மாயைப் பெரும்படைக் கேஇலக் காஎனை வைத்தனயோ!
நீயெப் படிவகுத் தாலும்நன் றேநின் பெருங்கருணை தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்தத் தற்பரமே!.
பெரும் பசியுடன் இரை தேடி பாய்ந்து வரும் புலியின் முன் மான் தன் குட்டியில் ஒன்றை விட்டுவிடுவது போல!
பெரும் வல்லமை கொண்ட இவ்வுலக மாயையிற்கு என்னை இரை என்று ஆக்கினாயோ?இறைவா
நீ எதை எனக்களித்தாலும் நல்லதே!
ஆனாலும் பெருங்கருணை கொண்ட தாயைப்போன்று செயல்படும் நீ இந்த அடியேனை உய்வித்து அருள்வாயாக!
சச்சிதானந்தம் தரும் பரம்பொருளே!
சி எஸ் சிவா
வியாழன், 7 ஆகஸ்ட், 2025
பத்ரகிரியார் புலம்பல்
ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை
நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?
வாய் பேச முடியாத ஒருவர் தான் கண்ட இன்பம் நிறைந்த கனவை எப்படி பிறரிடம் சொல்லி விளக்க முடியாதோ! அதே போல் தான்
ஆன்மீகத்தில் ஏற்படும் சுகானுபவங்களையும் பிறருக்கு வார்த்தைகள் மூலமாகவே அனைத்தையும் விளக்கிவிட முடியாது.
அப்பேற்பட்ட ஞானியை கண்டறிந்து அவரையே தனது குருநாதர் எனப் போற்றி அவரின் மௌனமும் நம் உயர்வுக்கு உண்டான பாடத்தை உணர்த்துகிறது என்று கண்டறிந்து உயர்வடைவது எக்காலம்?
சி.எஸ்.சிவா
வெள்ளி, 25 ஜூலை, 2025
தத்துவ நிலை
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய்
தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய்
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாயவண்ண நின்னையார் நினைக்கவல்லரே!.
சிவவாக்கியச் சித்தர்.
பூமி எனும் நிலத்தோடு கூடிக் கலந்து நான்கு பூதங்களும் இருக்கிறது அதனாலேயே பூவுலகு என்று பெயர் பெற்று பல்வேறு படைப்புகளை உருவாக்குகிறது.
தீயில் மூன்று பூதங்கள் கலந்து நிற்கிறது.,
இடகலை,பிங்கலை என்கிற வெப்பம் மற்றும் ஈரப்பதக் கொண்ட குளிர்க் காற்றாகவும் அதுவே ஒன்றுகூடி செயல்படும்போது சுழுமுனைக் காற்றாகவும் செயல்படுகிறது.
இந்தவாறே ஐம்பூதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு வெவ்வேறு தன்மையாக இவ்வுலகில் காட்சி அளிக்கிறது.
ஆகாய பூதமாகியது அனைத்து பூதங்களிலும் ஊடுருவி கலந்து நின்று செயல்படுகிறது.ஆனால் ஆகாய பூதமோ மற்றெந்த பூதங்களின் குணங்களோடும் ஒட்டாமல் நின்று அதன் பணியைச் செய்யும்.
நீலவண்ண கண்ணா நீயே அனைத்திலும் கலந்து நின்று காத்தருளுகிறாய் !
பரந்தாமா நீ இந்தவாறு இருப்பதை எண்ணி உணர வல்லவர் எவரோ?
சிவா
நிறுவனர்/தலைவர்
தாயுமானவர் ஞான சபை
காகபுஜண்டர் ஞானம் பாடல் 15
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...
-
கர்ம வினைகள் குறித்து சீடன் கேள்வி – குரு பதில்!. 1, சீடன் கேள்வி : குருநாதா, குருநாதர் காட்டிய வழியில் அச்சுபிசகாமல் தியானித்து வரும் மாணவன...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...