வெள்ளி, 21 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்; பாடல் 2

தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
      சேர்ந்துவளர் சித்தாகிஅச்
   சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
      திரமாகி நானாவிதப்

பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
      புலனுமாய் ஐம்பூதமாய்ப்
   புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
      போக்கொடு வரத்துமாகி

இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
      இன்றாகி நாளையாகி
   என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
      இவையல்ல வாயநின்னை

அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
      அறிவதற் கெளிதாகுமோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...