வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பத்ரகிரியார் புலம்பல்



ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை

நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?


வாய் பேச முடியாத ஒருவர் தான் கண்ட இன்பம் நிறைந்த கனவை எப்படி பிறரிடம் சொல்லி விளக்க முடியாதோ! அதே போல் தான் 

ஆன்மீகத்தில் ஏற்படும் சுகானுபவங்களையும் பிறருக்கு வார்த்தைகள் மூலமாகவே அனைத்தையும் விளக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட ஞானியை கண்டறிந்து அவரையே தனது குருநாதர் எனப் போற்றி அவரின் மௌனமும் நம் உயர்வுக்கு உண்டான பாடத்தை உணர்த்துகிறது என்று கண்டறிந்து உயர்வடைவது எக்காலம்?


சி.எஸ்.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...