திங்கள், 29 டிசம்பர், 2025

மௌனம்

தேடி அலைந்தேன்
ஞானியர் புத்தகங்களின் வழியே உண்மையை.

ஒருநாள் —
“நானும் இல்லை…
தேடுவதற்கும் ஒன்றுமில்லை…”
என்று அகநாதம் ஒலித்தது.

அந்த நொடியே
தேடுதல் நின்றது…
நானே புதிதாய் பிறந்தேன்.

என் அகம்தான்
புத்தகமாகி விட்டது —
அதன் பக்கங்களெல்லாம்
மௌனமெனும் வெட்டவெளி ஞானமே.

சி எஸ் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...