திங்கள், 29 டிசம்பர், 2025

மௌனம்

தேடி அலைந்தேன்
ஞானியர் புத்தகங்களின் வழியே உண்மையை.

ஒருநாள் —
“நானும் இல்லை…
தேடுவதற்கும் ஒன்றுமில்லை…”
என்று அகநாதம் ஒலித்தது.

அந்த நொடியே
தேடுதல் நின்றது…
நானே புதிதாய் பிறந்தேன்.

என் அகம்தான்
புத்தகமாகி விட்டது —
அதன் பக்கங்களெல்லாம்
மௌனமெனும் வெட்டவெளி ஞானமே.

சி எஸ் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...