சனி, 13 டிசம்பர், 2025

சிவம் உன்னுள்ளே? கவிதை வரிகளில்

சிவம் உன்னுள்ளே! கவிதை வரிகளில் 

மண் உடல் மாயை என்று
மறந்திடும் நாள்வரைக்கும்,
எண்ணம் என்னும் குரங்கு
ஏறி இறங்கி ஆடும்.

ஆசை என்னும் தீயில்
அகம் எரிந்து போகும்,
மோகம் என்னும் இருளில்
மெய்ஞ்ஞானம் மறையும்.

சுக்கு போல் காய்ந்த மனம்
சுழல்பிறவி அறுக்கும்,
இஞ்சி போல் ஈர மனம்
மீண்டும் மண்ணில் முளைக்கும்.

உள்ளே தேடு சிவனை,
ஊர்தோறும் அலையாதே;
அகம் சுத்தி செய்துவிட்டால்
அவனே நீயாய் நிற்பான்.

காயம் பொய்யென கண்டால்
காலன் உனை தொடான்;
வாய்மை வழி நின்றால்
வாழ்வு வீடாம் ஆகும்.

சி எஸ் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...