"ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே".
அபிராமி அந்தாதி பாடல் 11
ஆனந்தமும் பேரறிவும் எனது இயல்பாகிட வான்காந்தமாகி நின்று அருள் புரிகிறாய் தாயே !
வேதங்கள் அனைத்தும் உன் செந்தாமரை திருவடியையே போற்றுகிறது என்று கண்டு கொண்டேன்.
திருநீற்று சாம்பல் காட்டில் திருநடமாடும் ஆடல்கலை நாயகனுடைய பெருமையை எங்களுக்கு உணர்தும் நாயகியே!
சி.எஸ்.சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக