"துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே".
(அபிராமி அந்தாதி பாடல் 2)
தாய் அபிராமியே உலகனைத்துக்கும் மூலாதாரமாக விளங்குகிறாள்.
தொழுது துணை வேண்டுபவருக்கு எங்கும் எப்போதும் துணையாக இருப்பாள் அன்னை.
அன்னையின் இசைவை இசைந்து இருப்பவர்களுக்கு ஏராளமான வரம் அருளுவாள் அன்னை அபிராமி.
பேரன்பும், கண்களில் பெருங்கருணையும் கொண்டவள் தான் அதேசமயம் அவள் பாசத்திற்கு அங்குசமும் உண்டு என்பதை புரிந்து பிற மனிதர்களுக்கு துன்பங்கள் ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து விடுங்கள்.அன்பையே வழங்கும் அன்னையின் கண்டிப்பும் மிகுந்த வலி ஏற்படுத்தும்.
சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக