"அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே".
அபிராமி அந்தாதி பாடல் 3
உவமையோடு சற்று வார்த்தை ஜாலங்கள் மூலம் மறைத்து நமக்கென முன்னோர்கள் வெளிப்படுத்தியுள்ள மறைமொழிகளை நான் உணர்ந்து கொண்டேன்.
குருவாக இருந்து என்னை வழிநடத்தும் அன்னை அபிராமியே இது உன் அருளால் தான் நடந்தது .எமக்கு இந்த கல்வியை வழங்கிய.உனது திருவடியை போற்றுகிறேன் தாயே.
தனது அறியாமையால் பிறந்து பல்வேறு துன்பங்களை தனக்கே உரிய துன்பங்களாக எண்ணி தன் தலையை கொடுத்து நரக வேதனை அடைந்து வரும் பாவிகளும் சற்றேனும் அறச்செயல்களில் ஈடுபட்டு நீ தரும் இன்பமெனும் அருட்பார்வைக்கு உரியவர் ஆனால் அம்மனிதருக்கு என்றென்றும், எங்கெங்கும், எல்லா பொழுதுகளும் ஆனந்தமே! அபிராமித் தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக