செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி பாடல் .1

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே".
                                         அபிராமி பட்டர்.

 சூரிய சந்திர அக்கினி கலைகளை உணர்ந்தவர்கள் தான் மாதுளம் பழத்தின் முத்துக்களைப் போன்ற மானிக்க மாலையென உன்னை போற்றுவார்கள்.மின்னொளியாக ஜொலித்து குங்குமம் போன்று விளங்கும் எமது அன்னை அபிராமியே எனது உடம்பை காக்கின்றாள், என் விழிகளில் வந்து தங்கி எனது வழித்துணையாகவும்  விளங்குகிறாள்.

                                                       சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...