புதன், 25 மார்ச், 2026

காகபுஜண்டர் ஞானம் பாடல் 17

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 17

பாடல் :

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
  பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
  என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
  கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
  மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே.

உரைநடை விளக்கம்:

இங்கே காகபுஜண்டர் சித்தர் ஒரு உதாரணம் காட்டி ஞான ரகசியத்தை நமக்குச் சொல்கிறார்.

ஒரு கால் (காற்று) மேலிருந்து கீழாகவும், இன்னொரு கால் (காற்று) கீழிருந்து மேலாகவும் சுழல்கிறது என்று சொல்கிறார். இதை நேராக உடலுடம்போடு பொருத்திப் பார்க்க வேண்டாம். இது உள்ளுடம்பான ஒளியுடம்பின் சக்தி ஓட்டம் பற்றியது.

மேலே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “மதி”, சந்திரகலை ஓட்டம்.
கீழே நோக்கி இருக்கும் ஓட்டம் — அதுதான் “ரவி”, சூரியகலை ஓட்டம்.

இந்த இரண்டு ஓட்டங்களும் உடம்புக்குள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதை கவனிக்காமல் இருந்தால் அது சாதாரண வாழ்க்கை. அதை கவனித்து அறிந்தால் தான் யோக வாழ்க்கைப் பயணம் தொடங்கும்.

இந்த இரண்டு ஓட்டங்களையும் சரியாக வழிநடத்தி மேலே கொண்டு சென்றால், அண்ட உச்சியில் ஒரு நிலை கிடைக்கும். அங்கே தான் “வன்னி” — அதாவது அக்னி சக்தி — நிலைபெறும்.

இதைக் கேட்டாலோ,படித்தாலோ மட்டும் போதும் என்று விட்டு விடாதே.
ஆர்வத்துடன் உள்ளே கவனித்து, உற்றுப் பார்த்து பழகு.

சூரியன், சந்திரன், அக்னி — மூன்றும் உன்னுள் தான் வேலை செய்கிறது என்று தெளிவாகத் தெரியும்.

சி. எஸ். சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...