பாடல் :
தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.
உரைநடை விளக்கம்:
இங்கே நமது காகபுஜண்டர் சித்தர் “கற்ப நிலை” பற்றி சொல்கிறார். அந்த நிலை ஒருவனுக்கு வந்துவிட்டால், அந்த நிலையென்பது சாதாரண தியான அனுபவம் இல்லை அதுவே “சஞ்சார சமாதி” நிலையாகும்.இந்ந நிலையில் அனுபவம் பெற்ற பயிற்சியாளன் எங்கு இருந்தாலும் அவனுள் அமைதி என்பது உடன் இருக்கும்.
அந்த நிலையில் உடல் பசியும் கோபமும் குறைந்து மனத்தின். உள்ளே ஒரு சமநிலை உருவாகும்.
“உதயகிரி” என்று சொல்வது தலைக்குள் உதயம். அதாவது உள்ளே எழும் சூரிய ஒளியைப் பார்க்க ஆரம்பிக்கும் நிலையாகும். அப்போது மனத்தில் எழும் ஆசை, அலைச்சல், எண்ணங்கள் — இவை எல்லாம் மெதுவாக கரைந்து போகும்.
அவன் அந்த உச்சி நிலைக்கு சென்றபோது, உடம்பு, புலன், கருவிகள் — இவை எல்லாம் பின்னால் போய்விடும். அவன் உள்ளே மட்டும் நிலைபெறும்.
அந்த நிலையில் கூட, “கூற்றுவன்” — மரணம் — கூட ஒரு நிகழ்வாகத் தான் தெரியும். பயமாக இல்லை. அது ஒரு விளையாட்டு போலப் புரியும்.
இது கேட்டு புரிந்து கொள்ளும் விஷயம் இல்லை.பயிற்சியில்
அந்த நிலை அனுபவம் வந்தால் தான் தெரியும்.
அப்போது தான் புரியும்
உயிருக்கு பயப்பட வேண்டியது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று.
சி. எஸ். சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக