ஞான உபதேசம்
உன்னை உனக்கு காட்டுவதே
என் வேலை.
என்னை எனக்கு காட்டியவரும்
அவரை எனக்கு காட்டவில்லை;
ஆனால்
நான் அவரானேன்,
அவர் நானானார்.
இது
கண்ணால் காணும் காட்சியல்ல,
கரைந்து போகும் அனுபவம்.
குரு சீடனாக நிற்பதில்லை;
சீடன் குருவாக மாறுவதுமில்லை.
இருவரும்
தங்கள்தங்களை இழந்தபோது
ஒன்றே ஒன்று
மட்டுமே மிஞ்சும்.
நீ
நீயாகி நிற்கும் வரை
பயணம்.
நீயெனும் எல்லை
கரைந்தபின்
முடிவில்
நானாவாய்.
அங்கே
நான் இல்லை,
நீ இல்லை,
காட்டியதும் இல்லை,
காட்டப்பட்டதும் இல்லை.
அங்கே
உண்மை மட்டுமே.
அன்புடன்,
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக