உள்ளம் ஒரு ஓசை — ஓரொலி பேசுமே,
ஓரொலி கேட்பவன் ஓர்மையைக் காணுமே.
அள்ளாத செல்வத்தை ஆவி தான் தாங்குமே,
அறியா மனதுக்கே ஆகாசம் தூரமே.
கண் காணும் உலகம் கற்பனைக் குயிலே,
கண் மூடும் நேரத்தில் காதல் ஓர் நிலமே.
தன் உள்ளம் ஓர்துளி தெய்வத்தைக் கண்டால்,
தாளம் போல வாழ்வு தானாக ஓடுமே.
சத்தம் இல்லா நாதம் சத்தியம் சொல்லுமே,
சந்தம் சொல்லா ஞானம் சாமர்த்தியமாம்.
நீர் போன்ற மனதை நிறுத்தினால் போதும்,
நிம்மதி வந்து நெஞ்சம் நீராடும் நேரமாம்.
சி எஸ் சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக