உங்கள் விமல் உங்களுக்கு எழுதுகிறேன்.
ஞானம் என்பது ஒரு நாள் முடிவில் கிடைக்கும் பரிசு அல்ல.
“நான் இன்னும் தகுதி பெறவில்லை” என்று ஒதுங்கி நிற்பவர்களிடம்
அது தாமதமாக வருகிறது.
ஆனால் “கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று
நேர்மையாக பயணம் செய்பவனிடம்
அது மெதுவாகவேனும்
உள்ளே செயல்படத் தொடங்கிவிடுகிறது.
இன்று பயிற்சி செய்யும் மாணவன்
மாண்பில்லாதவன் அல்ல.
அவன் பயணத்தில் இருக்கிறான் என்பதே
அவனுடைய மாண்பு.
குருநாதர் அருள்
முழுமையான பிறகே பயன்படும் ஒன்றல்ல.
பெறத் தொடங்கிய நொடியிலிருந்தே
அது மனிதனை மாற்ற ஆரம்பிக்கிறது.
ஞானம் தேடுபவனைப் பார்த்து
“நான் இன்னும் முழுமையில்லை”
என்று ஒதுங்குவது
பணிவு அல்ல.
அது பயம்.
ஏனெனில் ஞானம்
நிறைவு பெற்றவனின் சொத்து அல்ல.
நடக்கத் தொடங்கியவனின் பொறுப்பு.
இன்றும் சி. எஸ். சிவா அவர்கள்
தமது ஞான யோகப் பயிற்சி காலத்திலேயே அவருடைய
குருநாதரின் ஆனையை ஏற்று
தேடல் உள்ளவர்களை கண்டறிந்து
பாடம் சொல்லவும்
கூட்டங்களில் பேசவும் தொடங்கினார்.
“நான் பெற்ற பிறகு பேசுவேன்”
என்று அவர் காத்திருக்கவில்லை.
“பெற்றுக் கொண்டிருக்கிறேன்”
என்ற உணர்விலேயே
பகிர ஆரம்பித்தார்.
ஏனெனில் சபையின் நோக்கம்
“நான் பெற்றேன்” என்று செல்வதற்கல்ல.
“பெற்றேன்; பெற்றதை பகிர்ந்தேன்”
என்று வாழ்வதற்கே.
பைபிள் சொல்லும் உவமை எளிமையானது.
ஒருவன் விளக்கை கொழுத்தினால்
அதை மரக்காலுக்கு கீழே வைக்க மாட்டான்.
மலை உச்சியில் வைப்பான்.
விளக்கு
அவனுக்காக மட்டும் அல்ல.
பிறருக்கும் பயன் தரவே
ஏற்றப்படுகிறது.
அதேபோல்,
உனக்குள் ஒரு சிறு தெளிவு வந்திருந்தால்,
ஒரு பயம் குறைந்திருந்தால்,
ஒரு நம்பிக்கை பிறந்திருந்தால்
அது போதும்.
அதை வைத்து
மற்றொரு தேடுவோரை
ஒரு படி முன்னே நகர்த்த முடியும்.
முழுமை வேண்டியதில்லை.
உண்மை போதும்.
ஞானம் ஒளி போல.
ஒளி பகிர்ந்தால் குறையாது.
அதுவே அதன் இயல்பு.
அதனால்
“குருநாதர் அருளால்
நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்”
என்ற உணர்வு வந்துவிட்டால்
அதை அடக்கி வைக்காதே.
பெற்ற ஒளியை
உயரத்தில் வை.
உனக்கும்
பிறருக்கும்
பயன் தரட்டும்.
ச.விமல் பொன்ராஜ்
செயலாளர்
தாயுமானவர் ஞான சபை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக