நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதும்
நன்றே- நல்லார்
குணங்கள் உரைப்பதும்
நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும்
நன்று."
ஔவையார்.
விளக்கம்:
நல்ல மனிதர்களைக் காண்பதும், அவர்களின் நல்ல சொற்களைக் கேட்பதும், அவர்களுடைய நற்குணங்களைப் பேசுவதும் மனிதனுக்கு நன்மை தரும். குறிப்பாக நல்லவர்களோடு இணங்கி வாழும்போது, அவர்களின் பண்புகள் நம்மையும் நல்லவர்களாக மாற்றுகின்றன. ஒருவர் யாருடன் பழகுகிறாரோ, அதன்படி அவருடைய வாழ்க்கையும் வடிவமைக்கப்படுகிறது. ஆகவே நல்ல வாழ்க்கைக்கான எளிய வழி நல்ல மனிதர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களுடன் பழகுவதே என ஔவையார் எடுத்துரைக்கிறார்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக