"மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே".
அபிராமி அந்தாதி பாடல் 4.
எளிமை பொருந்திய மனிதர்களும்,
கண் இமை தேவலோக தேவர்களுக்கு இருக்காது ஆனால் இமையோடு படைக்கப்பட்டு இருந்தபோதிலும் மனிதர்களிலும் சிலர் இமையாநாட்டத்தில் இருந்து தேடுகிறார்கள் அவ்வாறான தேவர்களுக்கும்,
ஓயாத எண்ணங்களின் குவியலாக விளங்கும் மாயையான கற்பனைத் தீர்மானங்களை விட்டுவிட்டு காலத்தின் முனையிலேயே நின்று செயலாற்றும் முனிவர்களும்,
உன்னையே தலை வணங்கி நிற்கின்றனர் தலையாய இன்பத்தை எனக்கு தடையின்றி வழங்கும் தலைவியே!
தலைக்குமேல் சந்திரனையும், பாம்பையும் (சந்திர கலை+குண்டலினி யோகம்)பகீரதி நிதிப் பிரவாகமாக அனுபவப் பேரின்பம் தரும் தாயே!
நீயும் உன் மணவாளனும் என்னோடு பொருந்திட வேண்டுகிறேன் அபிராமித் தாயே!!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக