வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
திருமந்திரம் பாடல் 24.
கல்வி , கேள்விகளில் வல்லவர்கள் மெய்வழிக் கல்வியை கற்றுக் கொண்டு துணிவுடன் வாழ்கையை எதிர்கொண்டு உயர்வர்.
மெய்வழிக் கல்வியை அறியாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்ந்தவராவர்.
அதனால் நமது சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; ஏன் தன்னுள்ளே இறைவன் இருப்பினும்! மெய்ஞான கல்வியை கல்லாதவர்கள் அவனை(சிவப்பரம் பொருளை) அடையும் நெறியை உணரவேமாட்டார்கள்.
🙏 குருவே சரணம்
பதிலளிநீக்குஆகட்டும்
பதிலளிநீக்கு