ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ஞானக் கண் மலரும் யோகம்

ஞானக் கண் மலரும் யோகம்:

உடல் கருவியாக விளங்குகிறது.
மனம் வழியாக இயங்குகிறது.
உயிர் பயணமாக விரிகிறது.
இவற்றை உணரச் செய்யும்
ஒளியே ஞானமாக விளங்குகிறது.

ஊனின் கண்
உருவங்களை உணர்கிறது.
நிறங்களை அறிகிறது.
வேறுபாடுகளை வகுக்கிறது.
அதனால்
உலக அனுபவம் விரிகிறது;
தனித்தன்மை வலுப்பெறுகிறது.

இந்தப் பார்வை
ஒரு காலத்தில்
உள்ளே திரும்புகிறது.
அந்தத் திருப்பமே
யோகத்தின் தொடக்கம்.

உள்ளே திரும்பிய பார்வை
மெதுவாக
ஞானக் கணாக மலர்கிறது.

இந்த மலர்ச்சி
மௌன குருவின்
உடனிருப்பில்
விதையாகிறது.

மௌன குரு
அமைதியைப் பரப்புகிறார்.
உள்ளே நோக்கும் ஆற்றலை
வலுப்படுத்துகிறார்.
அவரின் இருப்பே
பயிற்சியாக அமைகிறது.

அந்த உடனிருப்பில்
ஒரு தெளிவு எழுகிறது—

பார்ப்பவன்
தன்னையேப் பார்ப்பான்;
அவனே பாப்பான்.

இந்தப் பார்வையில்
உலகம் பிரதிபலிப்பாகத் தெரிகிறது.
மனம் அமைதியாகிறது.
அக உணர்வு தெளிவடைகிறது.

ஞானக் கண்
பார்வையைச் சுமக்கிறது.
தீர்ப்புகளைத் தளர்த்துகிறது.
இருப்பை நேரடியாக உணரச் செய்கிறது.

அந்த உணர்வில்
உள்ளும் வெளியும்
ஒரே ஓட்டமாகிறது.
நான் உணர்வு
விரிந்த விழிப்பாக மாறுகிறது.

இந்த விழிப்பே
யோகம்.
இந்த யோகமே
ஞானம்.

இந்த ஞானமே
ஞான சபை வழங்கும்
அருள் வழி.

அந்த அருளில்தான்
ஊனின் கண்
ஞானக் கண்ணாக
மலர்கிறது.

அன்புடன்,
சி எஸ் சிவா
நிறுவனர் & தலைவர்
தாயுமானவர் ஞான சபை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...