திருச்செந்தூர் கிளைச் செயலாளர் பாலமுருகன் எழுதிக் கொள்வது…
நமது குருநாதர் நமக்கு கொடுத்த பயிற்சி — பொக்கிஷத்திலும் பொக்கிஷம்.
அவர் அருளிய அந்த பயிற்சியை நாம் தினந்தோறும் செய்து கொண்டே இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் பல பழைய சுமைகளை மறந்து விடுகிறோம்.
பயிற்சி செய்து முடித்தவுடன்
“நாம் சும்மாதானே இருக்கிறோம்” என்று தோன்றும்.
ஆனால் சும்மா இருப்பதாக நாம் நினைத்தாலும்,
வெளியுலகத்தில் பிறருடன் பேசும்போது,
நம்மையே நாம் கவனிக்கும்போது,
நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம் என்பதைக் கண்டிப்பாக உணர முடிகிறது.
நம் நடை, நம் பேச்சு, நம் அணுகுமுறை—
எல்லாமே மெதுவாக மாற்றம் அடைகிறது.
ஆனால் இந்த மாற்றத்தை மனம் உடனே ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஏனென்றால் இதற்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கை,
இந்த நிலையை அடையும் போது,
“இது சரியா?” என்று மனம் சந்தேகப்பட ஆரம்பிக்கிறது.
உண்மையிலேயே வாழ்க்கை சிறப்பாக மாறுகிறது என்று தெரிந்தாலும்,
மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
பயிற்சியில் அமரும்போதும்,
மனம் ஒத்துழைக்காமல் இருக்கிறது.
ஏனென்றால்—
மனத்திற்கு எப்போதும் ஏதாவது ஒன்று வேண்டும்.
ஆசை, கோபம், பொறாமை,
பிறரை குற்றம் சொல்வது,
அவர்களை தாழ்த்தி, நம்மை உயர்த்திக் காட்டுவது—
இவையெல்லாம் மனத்திற்கு பழகிய உணவு.
ஆனால் இவையனைத்தையும் விட்டு,
அமைதியாக,
எதிர்பார்ப்பில்லாமல்,
உண்மையாக வாழ ஆரம்பித்தால்,
மனம் அதற்கு உடனே ஒத்துழைக்காது.
அதனால் தான்,
அனைவரும் நமது குருநாதர் கொடுத்த பயிற்சியை
தினந்தோறும் தவறாமல் செய்யுங்கள்.
அது மெதுவாக, மெதுவாக,
எல்லா மாசுகளையும் கரைத்து விடும்.
அப்பொழுது வாழ்க்கை உண்மையிலேயே
மிகச் சிறப்பாக மாறும்.
நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்.
இந்த பயிற்சி—
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அருள் பொக்கிஷம்.
அதனால்,
நமக்கு கிடைத்த குருநாதரும்,
ஞானசபை அன்பர்களும்—
ஒரே பெரிய குடும்பம்.
இந்த குடும்பத்தில்:
போட்டி இல்லை,
பொறாமை இல்லை,
வஞ்சகம் இல்லை,
கோபம் இல்லை,
எதிர்பார்ப்பும் இல்லை.
அதனால்,
அனைவரும் பயிற்சி செய்யுங்கள்,
இன்பமாய் வாழுங்கள்,
சிறப்பாக வாழுங்கள்.
இப்படிக்கு,
பாலமுருகன்
திருச்செந்தூர் கிளைச் செயலாளர்
தாயுமானவர் ஞானசபை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக