உள்ளமே கோயில்; உயிரே இலிங்கம்;
வெளியே தேடுதல் வீணென்றுணர்.
சொல்லென நிற்கும் சிந்தை ஒடுங்கின்
மௌனமே ஆகும் மந்திரமதானே.
காணும் கண்களும் காண்பதும் ஒன்றாய்
நாணும் நானும் நீங்கிட நின்றால்
யோகமும் இல்லை யோகியும் இல்லை
ஆகமமாய் நிற்கும் அருளது ஒன்றே.
மூச்சின் நடை நின்று மனம் அமைந்தால்
ஆசான் உள்ளே அசையாது நிற்பான்;
துரியமும் கடந்து துரியாதீதம்
பெயரின்றி நிற்கும் பெருநிலை அது.
அறிவால் அறியார்; அனுபவம் சொல்லார்;
அறிந்தேன் என்பதே அஞ்ஞானம் ஆம்.
அறியாமை தெளிந்த இடத்தினிலே
அறிவாய் நிற்கும் அருளது காண்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக