வெள்ளி, 21 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்; பாடல் 2

தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
      சேர்ந்துவளர் சித்தாகிஅச்
   சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
      திரமாகி நானாவிதப்

பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
      புலனுமாய் ஐம்பூதமாய்ப்
   புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
      போக்கொடு வரத்துமாகி

இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
      இன்றாகி நாளையாகி
   என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
      இவையல்ல வாயநின்னை

அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
      அறிவதற் கெளிதாகுமோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர்.

புதன், 19 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்;

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
      குணமொன்றும் ஒன்றிலேன்பால்
   கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
      குணங்களெத் தனைகொடியபாழ்ங்

கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
      கள்ளமெத் தனையுள்ளசற்
   காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
      கதிக்கென் றமைத்தஅருளில்

செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
      செல்வதெத் தனைமுயற்சி
   சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
      தேகத்தில் வாஞ்சைமுதலாய்

அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
      யானேன் இவைக்கும் ஆளோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர் பாடல் 1.

 உலக வாழ்க்கையில் ஆன்ம விழிப்புணர்வு இன்றி வாழ்பவர்களுக்கு துன்பங்கள் எத்தனை எத்தனையோ உண்டு ஆனாலும் என் பராபரமே நீ என்னை அத்தனையில் இருந்தும் காத்து நின்று வழிநடத்தி வருகிறாய் அதனால் என்னுள் பேரானந்தமே!

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...