செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தாயுமானவர் பாடல்கள்

 தாயுமானவர் பாடல் 


பாயப்புலி:


பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில மாயைப் பெரும்படைக் கேஇலக் காஎனை வைத்தனயோ!

நீயெப் படிவகுத் தாலும்நன் றேநின் பெருங்கருணை தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்தத் தற்பரமே!.


 பெரும் பசியுடன் இரை தேடி பாய்ந்து வரும் புலியின் முன் மான் தன் குட்டியில் ஒன்றை விட்டுவிடுவது போல!

 பெரும் வல்லமை கொண்ட இவ்வுலக மாயையிற்கு என்னை இரை என்று ஆக்கினாயோ?இறைவா

 நீ எதை எனக்களித்தாலும் நல்லதே!

ஆனாலும் பெருங்கருணை கொண்ட தாயைப்போன்று செயல்படும் நீ இந்த அடியேனை உய்வித்து அருள்வாயாக! 

சச்சிதானந்தம் தரும் பரம்பொருளே!


சி எஸ் சிவா

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

பத்ரகிரியார் புலம்பல்



ஊமை கனாக் கண்டு உரைக்க அறியா இன்பம் அதை

நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம்?


வாய் பேச முடியாத ஒருவர் தான் கண்ட இன்பம் நிறைந்த கனவை எப்படி பிறரிடம் சொல்லி விளக்க முடியாதோ! அதே போல் தான் 

ஆன்மீகத்தில் ஏற்படும் சுகானுபவங்களையும் பிறருக்கு வார்த்தைகள் மூலமாகவே அனைத்தையும் விளக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட ஞானியை கண்டறிந்து அவரையே தனது குருநாதர் எனப் போற்றி அவரின் மௌனமும் நம் உயர்வுக்கு உண்டான பாடத்தை உணர்த்துகிறது என்று கண்டறிந்து உயர்வடைவது எக்காலம்?


சி.எஸ்.சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...