வெள்ளி, 25 ஜூலை, 2025

தத்துவ நிலை

 பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் 

தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் 

மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் 

நீநிலாயவண்ண நின்னையார் நினைக்கவல்லரே!.


                          சிவவாக்கியச் சித்தர்.


 பூமி எனும் நிலத்தோடு கூடிக் கலந்து நான்கு பூதங்களும் இருக்கிறது அதனாலேயே பூவுலகு என்று பெயர் பெற்று பல்வேறு படைப்புகளை உருவாக்குகிறது.


தீயில் மூன்று பூதங்கள் கலந்து நிற்கிறது.,

இடகலை,பிங்கலை என்கிற வெப்பம் மற்றும் ஈரப்பதக் கொண்ட குளிர்க் காற்றாகவும் அதுவே ஒன்றுகூடி செயல்படும்போது சுழுமுனைக் காற்றாகவும் செயல்படுகிறது.


இந்தவாறே ஐம்பூதங்களும்  ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு வெவ்வேறு தன்மையாக இவ்வுலகில் காட்சி அளிக்கிறது.


ஆகாய பூதமாகியது  அனைத்து பூதங்களிலும் ஊடுருவி கலந்து நின்று செயல்படுகிறது.ஆனால் ஆகாய பூதமோ மற்றெந்த பூதங்களின் குணங்களோடும் ஒட்டாமல் நின்று அதன் பணியைச் செய்யும்.


நீலவண்ண கண்ணா நீயே அனைத்திலும் கலந்து நின்று காத்தருளுகிறாய் ! 


பரந்தாமா நீ இந்தவாறு இருப்பதை எண்ணி உணர வல்லவர் எவரோ?


சிவா 

நிறுவனர்/தலைவர் 

தாயுமானவர் ஞான சபை

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...