தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
செவ்வாய், 26 மே, 2026
திங்கள், 25 மே, 2026
காகபுஜண்டர் ஞானம் பாடல் 25
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 25
பாடல் :
பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் போலியான யோகப் பயிற்சிகளை கடுமையாகக் கண்டிக்கிறார்.
நாக்கை மேலே தூக்கி அண்ணாக்கில் வைத்துக் கொண்டு, அதையே பெரிய யோகம் என்று நினைத்து இருப்பவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று நேராகச் சொல்கிறார்.
அப்படி தவறாகப் பயிற்சி செய்தால் கண் பாதிக்கும், உடம்பும் கெடும் என்று எச்சரிக்கிறார். அதனால்தான் “அடயோகம்” — அதாவது தவறான யோகம் — என்று சொல்கிறார்.
யோகம் என்பது உடலை வதைக்கும் செயல் அல்ல. மனம் அண்ணாக்கு மையத்தில் நேராக நிலைபெற வேண்டும். அங்கே மனம் உறுதியாக நின்று கவனித்தால் தான் வாசி மேலே அடங்க ஆரம்பிக்கும்.
அப்போது வாசி கீழே இழுக்காமல் மேலே நிலைபெறும். அந்த நிலையில் தான் “வெட்டாத சக்கரம்” — அதாவது உள்ளே இருக்கும் நுண்ணிய சக்தி மையம் — அறியப்படும்.
வெளி வேஷம் போட்ட யோகம் அல்ல இது.
மனம் நிலைபெறும் உள் அனுபவம்.
சி. எஸ். சிவா
வெள்ளி, 15 மே, 2026
காகபுஜண்டர் ஞானம் பாடல் 24
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24
பாடல் :
தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.
உரைநடை விளக்கம்:
இந்தப் பாடலில் காகபுஜண்ட சித்தர் மிகவும் கடுமையாக மனிதர்களின் போலி ஆன்மீக வாழ்க்கையைச் சாடுகிறார்.
தனக்குள் இருக்கும் பிரம்மத்தை அறியாமல், வெளியே ஆயிரம் தெய்வங்கள் என்று அலைந்து திரிவதால் பயன் இல்லை என்று சொல்கிறார்.
“குரு”, “சீடன்” என்று வாயால் பேசிக்கொண்டு, உள்ளே எந்த அனுபவமும் இல்லாமல் வாழ்பவர்களை “உலுத்த மாடு” என்று சித்தர் திட்டுகிறார். “உதயகிரி” — அதாவது உள்ளே எழும் ஞான ஒளியை கூட பார்க்காதவன், ஆன்மீகம் பேசுவதற்கு தகுதியற்றவன் என்பதையே அவர் தாக்கமாகச் சொல்கிறார்.
பொய், களவு, கொலை செய்து, வேசையர் மேலே ஆசை வைத்து, வெளியில் மட்டும் பக்தி வேஷம் போட்டால், அவனால் குருபாதத்தை அடைய முடியாது என்று சித்தர் சொல்கிறார்.
அப்படிப்பட்டவன் இறுதியில் வீழ்வான் என்றும் எச்சரிக்கிறார்.
ஏனென்றால் உள்ளே சுத்தம் இல்லாமல், வெளிப்புற வேஷத்தால் ஞானம் வராது.
பிரம்மத்தை உள்ளே காணாதவன் —
எவ்வளவு ஆன்மீகம் பேசினாலும் வெறும் வாய்ச் சவடால் தான்.
சி. எஸ். சிவா
திங்கள், 20 ஏப்ரல், 2026
அகம் பாவம்
காகபுஜண்டர் ஞானம் பாடல் 23
புதன், 15 ஏப்ரல், 2026
காகபுஜண்டர் ஞானம் பாடல் 22
திங்கள், 13 ஏப்ரல், 2026
காகபுஜண்டர் ஞானம் பாடல் 21
காகபுஜண்டர் ஞானம் பாடல் 28
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 28 பாடல் : விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு ...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...
-
சிவவாக்கியர் பாடல் – 5 உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந...